இலங்கைக் கடற்படையினரால் வெவ்வேறு காலகட்டங்களில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவிடம் ஆலோசனை நடத்தியதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்தேன். அவரிடம் தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், "தமிழக மீனவர்களை விடுதலை செய்துவிடுங்கள், எல்லை தாண்டி மீண் பிடிக்குமாறு அவர்களை வலியுறுத்தும் பெரும் முதலாளிகளின் படகுகளை சிறைபிடியுங்கள் என இலங்கைக்கு நானே வலியுறுத்தினேன்" என சுப்பிரமணிய சுவாமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மீனவர்கள் படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
விளையாட்டு
37 mins ago
க்ரைம்
41 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago