சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த மே 23-ம் தேதி 6-வது முறை முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜூன் 16-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை, ஜூலை 21-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என 36 நாட்கள் பேரவை கூட்டத் தொடர் நடந்தது. கடந்த 2-ம் தேதியுடன் பேரவை நிகழ்ச்சிகள் முடிந்தன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அங்கு சில வாரங்கள் தங்கியிருந்து அரசு அலுவல்களை கவனிப்பார் எனவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago