போக்குவரத்து துறை காலி பணியிடங்கள்: விண்ணப்பங்களைப் பெற இன்று கடைசி

By செய்திப்பிரிவு

போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு இதுவரை சுமார் 1.15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களைப் பெற இன்றே கடைசி என்பதால், மேலும் அதிகம் பேர் விண்ணப்பங்களை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் போக்கு வரத்துத் துறையில் உள்ள 7,500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு பணி நடந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தம் 1.15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் நேரடியாகவும் ஆட்களை தேர்வு செய்யவுள்ளோம்.

ஓட்டுநர், நடத்துநர் உரிமம், கல்வித் தகுதி, உடல்தகுதி, முன் அனுபவம், அரசு இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பங்களை பெறுவதற்கு நவம்பர் 20 கடைசி நாளாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 8 கடைசி. நேர்காணல் தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிச. 8 கடைசி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

45 mins ago

க்ரைம்

49 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்