ராம்குமார் தங்கியிருந்த மேன் சனில் போலீஸ் கெடுபிடிகள் குறைந்ததையடுத்து அங்கு தங்கியுள்ள இளைஞர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சென்னை சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ்.மேன்சனில்தான் தங்கி யிருந்தார். மேன்சனில் இருந்த தகவல் குறிப்பின் மூலமே ராம் குமாரை கைது செய்துள்ளதாக காவல்துறை கூறியது.
செங்கோட்டையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில், சென்னையில் அவர் தங்கியிருந்த மேன்சனை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ராம்குமார் அறையில் தங்கியிருந்த நடேசன் என்ற ஏடிஎம் காவலாளி, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேன்சனில் உள்ளவர்களை வெளியே சாப்பிட செல்லக்கூட காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. ராம்குமாரின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேன்சனின் வாயில் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டன. இதனால், அங்கு தங்கியிருந்த இளைஞர் கள், நேற்று முன்தினம் முதல் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.
கட்டுப்பாடு தளர்வு
இந்நிலையில், நேற்று காவல் துறையினர் தங்களது கட்டுப்பாடு களை தளர்த்தினர். இதனால், நிம்மதி பெருமூச்சுவிட்ட மேன்சன் வாசிகள் சுதந்திரமாக வெளியே சென்று வந்தனர். ராம்குமார் கைது செயப்பட்டதையடுத்து போலீஸார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் குவிந்ததால் 2 நாட்களாக பரபரப்பாக இருந்த ஏ.எஸ்.மேன்சன் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. 2 போலீஸார் மட்டும் நேற்று காலை மேன்சனை கண்காணித்துவிட்டு திரும்பினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
வாழ்வியல்
19 mins ago
தமிழகம்
35 mins ago
கருத்துப் பேழை
57 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago