பட்டுக்கோட்டை அருகே காரை மறித்து, ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி வங்கிப் பணம் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள நாட்டுச் சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு பணம் தேவைப்பட்ட தால், கிளை மேலாளர் அரவிந்த் குமார்(27), காசாளர் சுப்பிரமணி யன்(45), கார் ஓட்டுநர் பழனி(52) ஆகியோர் அருகில் உள்ள மல்லிப் பட்டினம் வங்கிக் கிளைக்குச் சென்று, ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு காரில் திரும்பினர்.
துவரங்குறிச்சி வழியே சென்ற அவர்களின் கார், காசாங்காடு நடைபாலம் அருகே வந்தபோது, முகத்தை துணியால் மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், காரை மறித்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
கார் நின்றவுடன், காருக்குள் இருந்த 3 பேர் மீதும் மிளகாய்ப் பொடியைத் தூவிய அந்தக் கொள் ளையர்கள், வங்கி ஊழியர்கள் பெட்டியில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், ஏஎஸ்பி அரவிந்த் மேனன், ஆய்வாளர் சிங்காரவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
விளையாட்டு
27 mins ago
க்ரைம்
31 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago