காரை மறித்து மிளகாய்ப் பொடி தூவி வங்கிப் பணம் ரூ.20 லட்சம் வழிப்பறி

By செய்திப்பிரிவு

பட்டுக்கோட்டை அருகே காரை மறித்து, ஊழியர்களின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி வங்கிப் பணம் ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள நாட்டுச் சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைக்கு பணம் தேவைப்பட்ட தால், கிளை மேலாளர் அரவிந்த் குமார்(27), காசாளர் சுப்பிரமணி யன்(45), கார் ஓட்டுநர் பழனி(52) ஆகியோர் அருகில் உள்ள மல்லிப் பட்டினம் வங்கிக் கிளைக்குச் சென்று, ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு காரில் திரும்பினர்.

துவரங்குறிச்சி வழியே சென்ற அவர்களின் கார், காசாங்காடு நடைபாலம் அருகே வந்தபோது, முகத்தை துணியால் மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், காரை மறித்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

கார் நின்றவுடன், காருக்குள் இருந்த 3 பேர் மீதும் மிளகாய்ப் பொடியைத் தூவிய அந்தக் கொள் ளையர்கள், வங்கி ஊழியர்கள் பெட்டியில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், ஏஎஸ்பி அரவிந்த் மேனன், ஆய்வாளர் சிங்காரவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

27 mins ago

க்ரைம்

31 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்