வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத, பிளஸ் 2, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதிகளை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், பதிவை தொடர்ந்து புதுப்பிப்பதுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் தனியார் பணியில் இல்லாதவராகவும் இருப்பவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்படம் அரசின் உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு நிறைவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை பதிவு எண், உதவித்தொகை எண்ணுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்