நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

பழம் பெரும் நடிகை மனோரமா நெஞ்சுவலி காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை மனோரமா கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவருடைய உறவினர்கள் உடனடியாகச் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:

மனோரமாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திங்கள் கிழமை காலைதான் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் பற்றி தெரிவிக்கமுடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

க்ரைம்

30 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்