குழப்பத்துக்கு திமுக காரணம் அல்ல: கனிமொழி

By செய்திப்பிரிவு

“அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று நிருபர்களிடம் அவர் பேசியது: அதிமுகவில் யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆளுநர் ஏன் முடிவெடுக்க தாமதிக்கிறார் என தெரியவில்லை. அதிமுகவில் நடைபெறும் அணி மாறும் சம்பவங்களாலும், ஆளுநரின் தாமதத்தாலும் தமிழ்நாட்டில் தற்போது குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இது மக்களுக்கோ, மாநில வளர்ச்சிக்கோ நல்லதல்ல. அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிமுகவின் உள்கட்சி பூசலில் தலையிட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. திமுக மக்களுக்காக பாடுபடும் கட்சி. அதிமுக மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை. விரைவில் திமுக ஆட்சி அமைக்கும் என்றார்,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்