சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்: ரயில் சென்னை வந்த பிறகே ரூ.5.75 கோடி கொள்ளை?

By இ.ராமகிருஷ்ணன்

ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை நடந்த வழக்கு சிபி சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக் கப்பட்டதையடுத்து விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ரயில் சென்னை வந்த பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந் திருக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்த பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றினர். இப்படி வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ரூ.342 கோடியே 75 லட்சம் சேலம் விரைவு ரயிலில் தனி சரக்குப் பெட்டியில் ஏற்றப்பட்டு அந்த ரயில் கடந்த 8-ம் தேதி சேலத்திலிருந்து புறப்பட்டு 9-ம் தேதி அதிகாலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர், பணம் இருந்த சரக்கு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள பார்சல் சர்வீஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

பின்னர், சென்னை ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் ரயில் பெட்டியின் சீலிடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு தமிழக சிபிசிஐடி வசம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி கரன்சின்கா எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு கொள்ளை நடந்த ரயில் பெட்டியை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்து சேத்துப் பட்டில் உள்ள பணிமனைக்கு சக அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண் டார். அங்கு பணியில் இருந்த பணிமனை ஊழியர்களிடமும் கொள்ளை எப்படி நடந்திருக்கும் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊழியர்கள், “ரயில் பெட்டியை பற்றி நன்றாக தெரிந்த வர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்” என்று தெரிவித்தனர்.

பின்னர், அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில்வே போலீஸார் இதுவரை சேகரித்து வைத்திருந்த அனைத்து தகவல் களையும் கரன்சின்கா பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக ரயில் பாதுகாப்பு பணிக்காக சென்ற ஆயுதப் பிரிவு உதவி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்ட 9 பேரின் பெயர், முகவரி, செல்போன் எண் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெயர் பட்டியல், அவர்களின் முகவரியை பெற்றுக் கொண்டார்.

கொள்ளை நடந்தது எங்கே?

பணம் கொண்டு வரப்பட்ட ரயில் சேலத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழை யும்போது அங்கிருந்த கண்கா ணிப்பு கேமராவில் பணம் வைக் கப்பட்டிருந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளை எதுவும் இல்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே சரக்கு ரயில் சென்னைக்கு கொண்டு வரப்பபட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இது கு றித்து கூறியதாவது:

ரயில் கொள்ளை குறித்து முதலில் விசாரணையை தொடங் கியது ரயில்வே பாதுகாப்பு படையினர்தான். அவர்கள் முழுக்க முழுக்க ரயிலில் பாதுகாப்பு பணியை மட்டுமே செய்வார்கள். எனவே அவர்களிடம் புலனறியும் தன்மை அவ்வளவாக இருக்காது.

இதனால், இந்த வழக்கு அவர்களிடம் இருந்து எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு மாற்றப் பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி என்ற ஐ.டி. பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் அவர்கள்தான் முதலில் விசாரித்தார்கள். ஆனால், அவர் களால் துரிதமாக செயல்பட முடியவில்லை. காரணம் பாது காப்பு பணி உள்ளிட்ட பல்வேறு இதர பணிகள் அவர்களுக்கு இருந்தது. மேலும், செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்கும் கருவி உள்ளிட்ட முக்கியமான கருவிகள் அவர் களிடம் இல்லை. எனவே, இந்த கொள்ளை வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்தால் கொள்ளையர்களை விரைவாக நெருங்க முடியாது என நினைத்த டிஜிபி அசோக்குமார் உடனடியாக நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாருக்கு பாதுகாப்பு பணி போன்ற எந்த பணியும் கிடையாது. அவர்களிடம் சிறப்பாக புலன் விசாரணை செய்யக் கூடிய அதிகாரிகளும் உள்ளனர். மேலும் சைபர் கிரைம் பிரிவும் தனியாக உள்ளதால் தான் வழக்கு உடனடியாக மாற்றப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்