மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிப்பு: ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆக இருக்கும்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிக ளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சலக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு உத்தரவு பொருந்தும்.

மத்திய அரசின் ‘குரூப்-ஏ’ அதிகாரிகள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல், மத்திய அரசின் சார்நிலைப்பணி அதிகாரிகள் அதாவது குருப்-பி அதிகாரிகள் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.9,300 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 முதல் ரூ.4,600 வரையிலான பதவிகள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

தற்போது இந்த ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27 ஆக இருந்து வருகிறது. 27 என்பது பொதுப் பிரிவினருக்கான (ஓசி) வயது வரம்பு ஆகும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், பணியாளர் தேர்வாணையத்தால் ரூ.4200, ரூ.4600, ரூ.4,800 தர ஊதியத்துடன் கூடிய பணிகளுக்கான வயது வரம்பை 27-லிருந்து 30 ஆக உயர்த்தி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஓர் உத்தர

வைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி பின்வரும் பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுகிறது.

1. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உதவியாளர்

2. உள்துறை அமைச்சக உதவியாளர்

3. ரயில்வே அமைச்சக உதவியாளர்

4. வெளியுறவு அமைச்சக உதவியாளர்

5. பாதுகாப்பு அமைச்சக உதவியாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)

6. இதர அமைச்சகங்களில் உதவியாளர் (தர ஊதியம் ரூ.4,200, ரூ.4,600)

7. வருமான வரி ஆய்வாளர்

8. மத்திய கலால் ஆய்வாளர்

9. கடத்தல் தடுப்பு ஆய்வாளர்

10. ஆய்வாளர்

11. உதவி அமலாக்க அதிகாரி

(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)

12. அஞ்சலக ஆய்வாளர்

13. கோட்ட கணக்காளர்

14. போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத்துக்கும்

தர ஊதியம் ரூ.4,200)

‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுவதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பும் அதிகரிக்கப்படும்.

அதன்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பி னரின் வயது வரம்பு 35 ஆகவும், ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆகவும், மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 40 ஆகவும் உயர்த்தப்படும்.

எஸ்எஸ்சி ‘குரூப்-பி’ பணிகளுக் கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்தும்வரும் தேர்வர்களிடம் கேட்டபோது, “மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பு தற்போது பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35 ஆகவும் உள்ளது. பிஎல் பட்டம் பெற்றிருந்தால் அனைத்து தரப்பினருக்கும் கூடுதலாக ஓராண்டு வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

33 mins ago

சுற்றுலா

45 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

52 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

13 mins ago

மேலும்