குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

By செய்திப்பிரிவு

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் (ஸ்டடி சர்க்கிள்) மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வுக்கு விண்ணப்பித்த அத்தாட்சி, 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை (பொது) வரும் 28-ம்தேதிக்குள் நேரில் அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

15 mins ago

கல்வி

35 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்