இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் (ஸ்டடி சர்க்கிள்) மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வுக்கு விண்ணப்பித்த அத்தாட்சி, 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை (பொது) வரும் 28-ம்தேதிக்குள் நேரில் அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
20 mins ago
விளையாட்டு
15 mins ago
கல்வி
35 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago