தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு: இளைஞர் கைது

By இரா.கார்த்திகேயன்

தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளான நேற்று (திங்கள்கிழமை) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைச் சாலை தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலையைக் கல்லால் அடித்து மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். பெரியார் சிலையின் தலை மீது ஒரு ஜோடி காலணிகளை வைத்துச் சென்றிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திமுக மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுத்திடல் பெரியார் சிலை முன் குவிந்தனர்.

பெரியார் சிலையை அவமதித்தவர்களுக்கு எதிராகக் கோஷமிட்ட அவர்கள், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமரியாதை செய்ததாக செங்கல் சேம்பர் உரிமையாளர் நவீன் குமார் என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 mins ago

விளையாட்டு

31 mins ago

வேலை வாய்ப்பு

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்