தமிழகத்திலேயே தூத்துக்குடியில்தான் காற்று மாசு அதிகமாக உள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தினம் நாளை (ஜூன் 5) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் காற்று மாசு தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், ''தமிழகத்தில் 12 இடங்களில் காற்று மாசைக் கண்டறியும் கருவிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ரூ.24 கோடி செலவில் மேலும் 24 இடங்களில் காற்று மாசைக் கண்டறியும் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
15 இடங்களில் இதற்கான பணிகள் முடிந்துள்ளன. கூடிய விரைவில், அதாவது 2 அல்லது 3 மாதத்தில் மொத்தப் பணிகளும் முடிந்துவிடும்.
நிலக்கரி இறக்குமதி காரணமாக தூத்துக்குடியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இருந்தும் காற்று மாசு கட்டுக்குள்தான் உள்ளது'' என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago