கொடுத்த பணமெல்லாம் என்னாச்சு என்று குழம்பிக் கிடக்கிறார் தினகரன். ஆனால், பல இடங்களில் அவரது கட்சிக்காரர்கள் நூதன முறையில் பணத்தைச் சுருட்டி இருக்கிறார்கள்.
கோவை நகர்புறத்தில் வட்டச் செயலாளர் ஒருவரிடம் 500 ரூபாய் வீதம் 350 ஓட்டுக்குப் பணம் கொடுத்திருந்தார்களாம். பேருக்கு சிலருக்குப் பட்டுவாடா செய்த அந்தச் செயலாளர், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தாமே போலீஸுக்கு துப்புக் கொடுத்தாராம்.
உடனே, போலீஸ் அலறிக்கொண்டு வரவும், “அண்ணே... 345 பேருக்குப் பணம் குடுத்துட்டேன். மீதி அஞ்சு பேருக்கு குடுக்குறதுக்குள்ள போலீஸ் வந்திருச்சு. இந்தாங்க மீதி பணம்” என்று சொல்லி 2500 ரூபாயை வேட்பாளரிடம் கொடுத்தாராம்.
அந்த வண்டு முருகனின் வண்டவாளத்தை விசாரித்துப் பார்த்து மிரண்டுபோன வேட்பாளர், அவரையும் இப்படிச் சொன்ன இன்னும் சிலரையும் ஆள்வைத்து மிரட்டி பணத்தைப் பிடுங்கினாராம் !
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
கருத்துப் பேழை
27 mins ago
விளையாட்டு
31 mins ago
இந்தியா
35 mins ago
உலகம்
42 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago