மூன்றாவது நாளாக தொடரும் என்ஐஏ சோதனை: 3 பேர் கைதாக உள்ளதாக தகவல்

By டி.ஜி.ரகுபதி

கோவையில் மேலும் 5 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வியாழக்கிழமை உக்கடம், ஜி.எம்.நகர், வின்சென்ட் சாலையை சேர்ந்த புக் சதாம், உமர் பாரூக், ஜனாபர் அலி, பெரோஸ்கான், முபின் ஆகிய மேலும் 5 பேரிடம் விசாரித்தனர்.

பின்னர் புக் சதாமை விடுவித்தனர். மற்ற 4 பேரிடம் சில மணி நேரம் விசாரித்தனர். அதை தொடர்ந்து உமர் பாரூக்கை கோவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையும் (இன்று) ஜனாபர் அலி, முபின், பெரோஸ்கான் ஆகியோரை கொச்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரச்சொல்லி சம்மன் அனுப்பி வைத்தனர்.

அதன்படி உமர்பாரூக் கோவை என்ஐஏ அலுவலகத்திலும், மற்ற மூவர் கொச்சி அலுவலகத்திலும் இன்று ஆஜராகினர். அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை போத்தனூர் போலீஸார் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களான முகமது உசேன், ஷாஜகான், ஷேக் ஷபிபுல்லா ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இன்று 2-வது நாளாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இன்று மாலை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

17 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

11 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

25 mins ago

வலைஞர் பக்கம்

29 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

39 mins ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

44 mins ago

மேலும்