புழல் சிறையில் அழகேசன் தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் சிக்கிய அழகேசன், புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் அஸ்வினி (19). கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி கல்லூரிக்கு அருகே அழகேசன் என்ற இளைஞர் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அழகேசனைத் தாக்கினர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அழகேசனுக்கு புழல் சிறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ள அழகேசனை சிறை காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் தனது அறையில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. லுங்கியை கிழித்து அதன் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்ய அவர் முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

ஏற்கெனவே நுங்கம்பாக்கத்தில் ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் சிக்கிய ராம்குமார் என்ற இளைஞர் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் சிக்கியுள்ள அழகேசன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்