கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் சிக்கிய அழகேசன், புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் அஸ்வினி (19). கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார். கடந்த 9-ம் தேதி கல்லூரிக்கு அருகே அழகேசன் என்ற இளைஞர் அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அழகேசனைத் தாக்கினர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அழகேசனுக்கு புழல் சிறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உயர் பாதுகாப்பு பகுதியில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ள அழகேசனை சிறை காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் தனது அறையில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. லுங்கியை கிழித்து அதன் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்ய அவர் முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஏற்கெனவே நுங்கம்பாக்கத்தில் ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் சிக்கிய ராம்குமார் என்ற இளைஞர் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் சிக்கியுள்ள அழகேசன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வேலை வாய்ப்பு
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
கல்வி
11 hours ago