புதுச்சேரி - சென்னை இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

By தினேஷ் வர்மா

தமிழகம் எங்கிலும் பதற்றம் நிலவுவதால், அசாதாரண சூழலை தவிர்க்கும் விதமாக சென்னை-புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அமைதியான சூழல் நிலவினாலும், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, சென்னை-புதுச்சேரி இடையிலான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம், திமுக அலுவலகங்கள் அங்கு வெறிச்சோடி காணப்படுகின்றன. பதற்றம் ஏற்படக்கூடிய இடங்களில் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

15 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

9 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

23 mins ago

வலைஞர் பக்கம்

27 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

48 mins ago

மேலும்