குடும்ப வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

குடும்பப் பிரச்சினைகள், சொத்துத் தகராறு தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

மனைவியைத் தாக்கியது தொடர்பான முன் ஜாமீன் கோரி ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்பப் பிரச்சினைகள், சொத்துத் தகராறு பிரச்சினைகளில் கைது நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார் நீதிபதி.

 

மேலும் கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

57 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்