அரசியலில் ரவுடிகள் அதிகம் உள்ளனர்: கடலூரில் கமல்ஹாசன் கருத்து

By செய்திப்பிரிவு

அரசியலில் ரவுடிகள் அதிகம் உள்ளனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடலூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிடம் என்பது 2 கட்சிக்கு, 3 குடும்பத்துக்குச் சொந்த மானது அல்ல. திராவிடம் என்பது கட்சி சம்பந்தப்பட்டதல்ல. அது நாடு தழுவியது. தென்னிந்தியாவில் மட்டும் திராவிடர்கள் வாழ்வதாக நினைக்க வேண்டாம். வட இந்தியா விலும் திராவிடர்கள் வாழ்கிறார் கள். அரசியல் காரணங்களுக்காக ஏழைகள் ஏழைகளாகவே வைக்கப் பட்டுள்ளனர்.

மதுவிலக்கு அரசால் செய்ய முடியாது, எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். எம்பி தேர்தலில் யாரோடு கூட்டு சேர்வது என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம். எங்களை யாரும் இயக்கவில்லை.

மாற்றம் விரும்பும் மக்கள்

2 நாள் சுற்றுப் பயணத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனர் என்பதை தெரிந்து கொண்டேன்.

40 ஆண்டுகளாக அரசியலில் ரவுடிகள் அதிகம் உள்ளனர். நான் எல்லோரையும் சொல்லவில்லை. அரசியல் தீண்டத்தகாதது அல்ல. அரசியலை சுத்தம் செய்ய வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

2 mins ago

இந்தியா

25 mins ago

விளையாட்டு

43 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

52 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்