மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா ராஜேந்திரன் மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கஜா புயல் மின் சீரமைப்பு பணியில் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே, தமிழக முதல்வரிடம் கூறி ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வது  குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று மின்வாரிய அமைச்சர் தங்கமணி கூறினார். அதை ஏற்று நாங்களும் எந்தக் குறையும் வைக்காமல் சிறப்பாக பணியாற்றி வந்தோம்.

ஆனால், மின் துறை அமைச்சர், செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் மின்வாரிய ஊழியர்களை மட்டுமே பாராட்டுகிறார். அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னரும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, கடந்த 20-ம் தேதியுடன் மின்வாரிய நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர்.

ஆனால், ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வரு

கிறார்கள். கஜா புயல் சீரமைப்பு பணியில் இருக்கும் தொழிலாளர்களும், உற்பத்தி, பகிர்மானம்,தொடரமைப்பு பிரிவுகளில் பணிபுரியும்

தமிழகத்தின் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் நாளை முதல் (டிச.25) பணி நிரந்தர அறிவிப்பு வரும்வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்