மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் டிசம்பர் 7-ல் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் மத்தியக்குழு உறுப்பினர் ஆர்.வித்யாசாகர் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்தியில் உள்ள மோடி அரசும் பாஜக, சங்பரிவார் அமைப்புகளும் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கை யையும் இந்திய அரசியல் சாசனத்தையும் நிர்மூலமாக்க திட்டமிட்ட சதிகளை மேற்கொண்டு வருகின்றன. அயோத்தியில் ஏற்கெனவே பாபர் மசூதியை இடித்த மதவெறி அமைப்புகள், தற்போது ராமர் கோயில் கட்ட வேண்டும் என போராட்டங்களை நடத்தி வரு கின்றன. இந்த மதவெறி சக்திகளை எதிர்த்தும் இந்திய அரசியல் சாசனத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாத்து நிலைநிறுத்த அம்பேத்கர் நினைவு தினத்தில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்த இடதுசாரி கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை, அரசியல் சாசன பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி வரும் டிசம்பர் 7-ம் தேதி மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்