சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: நீதிமன்ற விசாரணை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை அயனாவரம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இதுதொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அயனாவரம் மகளிர் போலீஸார் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையை தாக் கல் செய்துள்ளனர். 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப் பட்டது.

இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று தொடங் கியது.

இதற்காக 17 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி மஞ்சுளா முன்பாக ஆஜர்படுத்தப் பட்டனர். போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார். அதையடுத்து இந்த வழக்கை டிச.5-க்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட உமாபதி என்பவர் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவையும் டிச.5-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 mins ago

விளையாட்டு

28 mins ago

வேலை வாய்ப்பு

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்