வெப்பச் சலனம் காரணமாக தமிழ கம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக உள்ளது. அதன் விளைவாக வெப்பச் சலனம் ஏற்படக்கூடும். அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக அரிய லூர் மாவட்டம் ஜெயங்கொண்டத் தில் 4 செமீ, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருச்செங் கோடு, கடலூர் மாவட்டம் சேத்தி யாத்தோப்பு, தொழுதூர், சிதம்ப ரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago