நீலகிரியில் ரிசார்ட்களுக்கு எதிராக நடவடிக்கை: கூடலூரிலும் சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனம் கட்டியுள்ள ரிசார்ட்டுகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடலூர் அருகே தேவாலா கிராமத்தில் 180 ஏக்கரை அக்கார்டு எனும் அமைப்பு சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட வருவாய் அதிகாரி அறிவிப்பாணை வெளியிட்டார். இதை ரத்து செய்யக் கோரி, அக்கார்டு அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 48 மணி நேரத்தில் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள நிரந்தர கட்டிடங்களுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணையிட்டார். பழங்குடியினர் வசிக்கும் வனப்பகுதியில் ரிசார்ட் போன்ற வர்த்தக கட்டுமானங்கள் கட்டப்பட்டது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல, காலி இடத்தை 2 நாள்களில் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென அக்கார்டு நிறுவனத்திற்கு ஆணையிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

24 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்