2016 சட்டமன்ற தேர்தலிலும் தற்போதைய தே.ஜ. கூட்டணி தொடரும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

By செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு திங்கள்கிழமை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தேமுதிகவின் கூட்டணி கட்சியான பாஜக தலை வர்கள் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி னிவாசன், மாநில பொதுச்செயலாளர் (அமைப்பு) மோகன்ராஜுலு ஆகியோர் விஜய காந்தை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,“தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு என் சார்பிலும் பிரதமர் நரேந்திர மோடி சார்பிலும், பாஜக சார்பிலும் வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்றார்.

மேலும் “தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியாக வும் பலம் வாய்ந்த கூட்டணியாகவும் உள்ளது. எனவே இந்தக் கூட்டணி 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

29 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்