கர்நாடகாவில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,501 கனஅடியாக குறைந்தது

By வி.சீனிவாசன்

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 23,501 கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின.

இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத் துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1. 20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால், அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்த‌து.

அதன்படி கபினி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 4 ஆயிரத்து 908 கனஅடி என மொத்தம் 19 ஆயிரத்து 908 கனஅடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு தற்போது 23,501 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர் திறப்பும் 33 ஆயிரத்து 970 கனஅடியிலிருந்து 26 ஆயிரத்து 071 கனஅடியாக குறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

24 mins ago

உலகம்

31 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்