அரசின் கர்ப்ப கால மற்றும் குழந்தை வளர்ப்பு திட்டப் பயன்களைப் பெற கர்ப்பிணிகள் அரசு இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை மாநகரப் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தங்கள் கர்ப்ப கால விவரங்களை நேரடியாக இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அதற்காக அரசு சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சேவையை https://picme.tn.gov.in/picme_public என்ற இணைய தளத்தில் பெறலாம்.
மேலும், 102 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், வீட்டின் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்களின் மூலமும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். பின்னர் ஒரு வாரத்தில், பயனாளிகளுக்கு, பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். அது கர்ப்பகால சேவை பெற மிகவும் அவசியம். மருத்துவமனையில் இருந்து குழந்தை பெற்ற தாய்மார் வீடு திரும்பும்போதே குழந்தையின் பிறப்பு சான்று வழங்கவும் இந்த சேவை ஏதுவாக இருக்கும். எனவே இந்த இணையதளத்தில் கர்ப்பிணிகள் முன்பதிவு செய்து பயன்பெறலாம் எனக் கூறப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
50 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago