பராமரிப்பு பணி நடப்பதால் இன்றும், நாளையும் 18 மின்சார ரயில்கள் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்றும், நாளையும் 18 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை இடையே மே 26, 27 தேதிகளில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (ரயில் புறப்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.)

இன்று ரத்தாகும் ரயில்கள்

வேளச்சேரி - ஆவடி காலை 10.15, வேளச்சேரி - திருவள்ளூர் நண்பகல் 12.15, வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் நண்பகல் 12.55, சென்ட்ரல் - ஆவடி நண்பகல் 12.35, சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 9.30, ஆவடி - வேளச்சேரி பிற்பகல் 2.40, திருவள்ளூர் - சென்ட்ரல் பிற்பகல் 2.40, ஆவடி - கடற்கரை பிற்பகல் 1.35, திருவள்ளூர் - வேளச்சேரி காலை 11.05 மணி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருவள்ளூர் - வேளச்சேரி மதியம் 1.40 மணி மின்சார ரயில் திருவள்ளூரில் இருந்து ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பிற்பகல் 2.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாளை ரத்தாகும் ரயில்கள்

கடற்கரை - ஆவடி காலை 11.10, கடற்கரை - திருவள்ளூர் பிற்பகல் 1.05, கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பிற்பகல் 1.50, சென்ட்ரல் - ஆவடி நண்பகல் 12.35, சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 9.30, ஆவடி - கடற்கரை பிற்பகல் 2.40, திருவள்ளூர் - சென்ட்ரல் பிற்பகல் 2.40, ஆவடி - கடற்கரை பிற்பகல் 1.35, திருவள்ளூர் - கடற்கரை காலை 11.05 மணி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருவள்ளூர் - கடற்கரை பிற்பகல் 1.40 மணி மின்சார ரயில் திருவள்ளூரில் இருந்து ஆவடி வரை மட்டும் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பிற்பகல் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

41 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்