கடல் நீர் எப்போது வற்றும்?, கருவாடு எப்போது சாப்பிடுவது? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காத்திருப்பதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேல்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ புரட்சி தலைவி நமது அம்மா நாளேட்டில் ‘ பாஜகவும் அதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி’ என எழுதப்பட்டிருப்பது கட்டுரை மட்டுமே. பாஜகவுடன் கூட்டணி குறித்து கட்டுரை எழுதியவர் முடிவெடுக்க முடியாது.
கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். தமிழக மக்கள் உற்ற நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். காவிரி விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் முதல்வரை அழைத்துச் சென்று பிரதமரை பார்ப்பது என்பது போகாத ஊருக்கு வழியாகும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “கடல் நீர் எப்போது வற்றும்? கருவாடு எப்போது சாப்பிடுவது? என ஸ்டாலின் காத்திருப்பதை காட்டுகிறது” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
5 mins ago
சினிமா
17 mins ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
51 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago