இலங்கை அரசைக் கண்டித்து, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் ஆக.15-ல் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளதால் தொழில் பாதிக்கப்பட்டு, சுமார் ரூ.18 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப் பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 530 விசைப் படகுகளில் மீனவர்கள் சுமார் 2500 பேர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மீன்பிடிக்கச் செல்லும் இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கரை திரும்புவர்.
இந்நிலையில் எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். படகுகளும் பறிமுதல் செய்யப் படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மீன வர்கள் 20 பேரை இலங்கை அரசு விடுவித்திருந்தாலும் சுமார் 64 விசைப்படகுகள் இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன.
படகுகள் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்பதால் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சுதந்திர தினமான ஆக. 15-ம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். இதனால் நாளொன்றுக்கு ரூ.2 கோடி வீதம் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து கோட்டைப் பட்டினம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது: இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப் பட்டிருந்தாலும் அவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை மறுத்துள்ளது.
எனவே, பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத் தியுள்ளோம். இதுவரை எந்த உடன்பாடும் எட்டவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளோம். இதனால், நாளொன்றுக்கு ரூ.2 கோடி வீதம் இதுவரை சுமார் ரூ.18 கோடி வரை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
21 mins ago
வாழ்வியல்
27 mins ago
தமிழகம்
51 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago