அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து முதல்வராக வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். அது நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்பது நடக்காத ஒன்று.
அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறார். அரசுக்கு நெருக்கடி கொடுத்து முதல்வராக வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். அது நடக்காது.
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மாநில சுயாட்சியைப் பேணிப் பாதுகாக்கிறோம். மத்திய அரசான பாஜகவுடன் உறவு வைத்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே.
காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது இலங்கையில் உச்சகட்டப் போர் நடைபெற்றது. அப்போது திமுகவுக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி நெருக்கடி தந்தாரா? முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். திமுகவுக்கான கரும்புள்ளியாக, தலைகுனிவாக இந்த வரலாற்றுப் பிழை அமைந்திருக்கிறது'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
9 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago