வந்தவாசியில் மயானக் கொள்ளை திருவிழா ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, ‘‘வந்தவாசி சன்னதித் தெருவில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மயானக் கொள்ளை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில், சாமி வேடமிட்டு ஊர்வலமாக வருவோரை ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசிப்பார்கள்.
அதன்படி, வந்தவாசி சின்ன தெருவைச் சேர்ந்த கவுதம் (13) மற்றும் உசேன் (11) ஆகியோர் நேற்று ஊர்வலத்தை பார்க்க விரும்பினர். இதற்காக சன்னதி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தின் மாடியில் இருந்தபடி இருவரும் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டிடத்தையொட்டி சென்ற மின்சார கம்பியின் மீது கவுதமின் கால் தவறுதலாகப் பட்டது. இதில், மின்சாரம் பாய்ந்து கவுதம் மற்றும் அருகில் நின்றிருந்த உசேன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள், இருவரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கவுதம் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. உசேன் ஆபத்தான நிலையில் இருப்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக வந்தவாசி தெற்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
க்ரைம்
27 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago