கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மருத்துவர்கள் வெள்ளை அங்கி பேரணி: சென்னையில் 16-ம் தேதி நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்கள் வரும் 16-ம் தேதி சென்னையில் வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்தவுள்ளனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் உட்பட 8 அரசு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பை தொடங்கியுள்ளன. இந்த கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்கள் கே.செந்தில், பி.பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங் கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப். 15-ம்தேதி நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களும் ஒருங்கி ணைந்து கையெழுத்திட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டம் நடந்து 2 மாதங்கள் கடந்துவிட்ட போதி லும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரம், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் இடம்பெறவில்லை.

வருத்தம் அளிக்கிறது: அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து செயல்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

அதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்பு வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என்று அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

38 mins ago

உலகம்

36 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

மேலும்