ஒக்கி புயலில் சிக்கி இறந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் இருவர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாகை மாவட்டம், கீழ் வேளூர் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் சபினன், மீன்பிடிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் லட்சத்தீவில் கண்டெடுக்கப்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் மகன் ஜூடு மீன்பிடிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒக்கி புயலால் ஏற்பட்ட பலத்த காற்றில் சிக்கி இறந்தார் என்ற செய்தியையும் அறிந்து துயரம் அடைந்தேன்.
இருவர் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 min ago
விளையாட்டு
5 mins ago
இந்தியா
9 mins ago
உலகம்
16 mins ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago