தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது, அது செல்லும் திசை பற்றி, பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவுசெய்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை குறித்த தி தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பதிவு:
"தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும், டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மழை இருக்கும். தென் மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி இன்று அல்லது நாளை நகர்ந்துவிடும்.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
நமக்கு அதிகமான மழை தேவைப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தென் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் இந்த மழையால் படிப்படியாக உயரக்கூடும்.
புயல் வருகிறதா?
அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது எங்கே நகரும் என்பதை இப்போது கூற முடியாது. இந்தப் புயல் தெற்கு அந்தமானில் இருந்து வடமேற்காக கூட நகரலாம். ஆகையால், அந்தப் புயல் எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை அறிய சிறிது காத்திருக்க வேண்டும். பார்க்கலாம்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
25 mins ago
க்ரைம்
29 mins ago
இந்தியா
27 mins ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
3 hours ago