சாத்தங்காடு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.26 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீஸார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.
அதன்பேரில், சாத்தங்காடு போலீஸார் நேற்று முன் தினம் திருவொற்றியூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், ராஜாஜி நகர், சாஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட எண்ணூர் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (63), ராஜாஜி நகரை சேர்ந்த அஜரய்யா(30), திருவொற்றியூரை சேர்ந்த ரவி(36) மற்றும் கண்ணன்(34), கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (33), ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரொக்கப் பணம் ரூ.26 ஆயிரம், 6 செல்போன்கள் மற்றும் 8 சீட்டு கட்டுகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago