சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சகோதரர் பலி

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் சாயக்காரத் தெருவைச் சேர்ந்தவர் தேவபாண்டியன்(57). தொழிலதிபரான இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் சகோதரர் ஆவார். இவர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு செல்வதற்காக அதிகாலையில் ராமநாதபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டார். ஓட்டுநர் பாஸ்கரன்(35) என்பவர் காரை ஓட்டினார்.

சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த தேவபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓட்டுநர் பாஸ்கரன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்