சிதம்பரம் குமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கெனவே இரண்டு முறை கருவுற்ற அவருக்குக் கரு தங்காமல் போனது. மூன்றவாது முறையாகக் கருவுற்றிருந்தபோது கணவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுவிட்டார். இம்முறையும் கரு கலைந்துவிட்டது. தன் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்தால் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்கிற பயத்தால் வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணிப் பெண்ணைப் போலப் பாவித்து வந்துள்ளார். ஒன்பது மாதங்களாக இப்படி இருந்தவருக்குப் பிரசவம் பார்க்க அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆலோசனை சொல்லி அனுப்பிவைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ‘தாயானால்தான் பெண்’ என்று காலங்காலமாக பெண்ணின்மீது சுமத்தப்படும் சமூக அழுத்தம்தான் இது போன்ற முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது; இந்த மாற்றம் முதலில் குடும்பங்களிலிருந்து தொடங்க வேண்டும் என்கிற கருத்து பரவலாகப் பகிரப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
25 mins ago
வணிகம்
47 mins ago
தமிழகம்
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago