‘பின்தொடர்ந்தால்’ சட்டம் துரத்தும்

By செய்திப்பிரிவு

அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்தான் இதை எழுதத் தூண்டியது. தமிழ்நாட்டில் இளங்கலை அறிவியல் முடித்த மாணவன் ஒருவன் மேற்படிப்புக்காக இங்கிலாந்துக்குச் சென்றான். அங்கே விடுதியில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த இத்தாலி நாட்டுப் பெண்ணைச் சந்தித்தான். அந்தப் பெண்ணின் பண்பான மொழி, அந்த மாணவனின் மனத்தை இதமாக்கியது. முகமறியா மனிதர்கள் மத்தியில் மொழி புரியாத நாட்டில் இப்படி யாராவது பேசினால் அவர் மீது பிணைப்பு ஏற்படுவது இயற்கையானது. அந்த உணர்வை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு கடந்து சென்று படிப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த மாணவனோ மாற்றுப்பாதையில் சென்றான்.

அந்த இத்தாலியப் பெண்ணிடம் பேசுவது இதமாகவும் இணக்கமாகவும் இருந்ததால் மீண்டும் பேச ஆசைப்பட்டு அவரது அலைபேசி எண்ணைக் கேட்டான். அந்தப் பெண் தரவில்லை. ஆனாலும் அந்தப் பெண் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று அவரது முகவரியைக் கேட்டான். அந்தப் பெண்ணும் அவனைப் புண்படும் வகையில் பேசாமல் நாகரிகமாக மறுத்துவிட்டார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் நட்பு வேண்டுகோள் விடுக்க, அவர் அதைச் சட்டை செய்யவில்லை. இவற்றைக் கவனித்து வந்த அந்தப் பெண்ணின் தோழி இதைப் பற்றிக் காவல்துறையில் புகார் அளிக்கச் சொல்லியும் அவர் அதைச் செய்யவில்லை. ஆனால், புகார் அளித்துவிடுவேன் என்கிற தகவலை அந்த மாணவனிடம் தெரிவித்தார். அது ஒரு மறைமுக எச்சரிக்கை என்பது மாணவனுக்குப் புரியவில்லை. தனக்கு அவன் மேல் ஈடுபாடு ஏதுமில்லை என்றும் எந்தத் தனிப்பட்ட விஷயத்தையும் அவனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை என்றும் தெள்ளத் தெளிவாகச் சொல்லியும்விட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

14 mins ago

க்ரைம்

18 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்