கோழி கண்ட வைரம் - பாடல் - அழ. வள்ளியப்பா

By அழ. வள்ளியப்பா

கோழி ஒன்று குடுகு டென்று
ஓடி வந்ததாம் - வந்து
குப்பை மேட்டில் ஏறிக் கிளறிக்
கிளறிப் பார்த்ததாம்.

தின்ன ஏதும் தானியந்தான்
அங்கே இல்லையாம் - பசி
தீர்த்துக் கொள்ள வழியில் லாமல்
ஏங்கி நின்றதாம்.

அந்தச் சமயம் தரையில் ஏதோ
பளபளத்ததாம் - மிக்க
ஆவ லாக அருகிற் சென்று
கூர்ந்து பார்த்ததாம்.

கண்ணைக் கவரும் வைரம் ஒன்றைத்
தரையில் கண்டதாம் - உடன்
கலக்கத் தோடு அதனைப் பார்த்துக்
கோழி சொன்னதாம்:

'மதிப்பு மிகவும் உயர்ந்த தென்று
மனிதர் கூறிடும் - நல்ல
வைரமே நான் உன்னை வைத்து
என்ன செய்வேன்?

நெல்லில் ஒன்றே இந்த நேரம்
எனக்குக் கிடைப்பினும் - நான்
நிகரில்லாத மகிழ்ச்சி யோடு
கொத்தித் தின்னுவேன்.

பாரில் உள்ள வைரம் யாவும்
ஒன்று சேரினும் - என்
பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி
இல்லை, இல்லையே!'

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

9 mins ago

வாழ்வியல்

33 mins ago

தமிழகம்

49 mins ago

ஆன்மிகம்

7 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

மேலும்