கோழி ஒன்று குடுகு டென்று
ஓடி வந்ததாம் - வந்து
குப்பை மேட்டில் ஏறிக் கிளறிக்
கிளறிப் பார்த்ததாம்.
தின்ன ஏதும் தானியந்தான்
அங்கே இல்லையாம் - பசி
தீர்த்துக் கொள்ள வழியில் லாமல்
ஏங்கி நின்றதாம்.
அந்தச் சமயம் தரையில் ஏதோ
பளபளத்ததாம் - மிக்க
ஆவ லாக அருகிற் சென்று
கூர்ந்து பார்த்ததாம்.
கண்ணைக் கவரும் வைரம் ஒன்றைத்
தரையில் கண்டதாம் - உடன்
கலக்கத் தோடு அதனைப் பார்த்துக்
கோழி சொன்னதாம்:
'மதிப்பு மிகவும் உயர்ந்த தென்று
மனிதர் கூறிடும் - நல்ல
வைரமே நான் உன்னை வைத்து
என்ன செய்வேன்?
நெல்லில் ஒன்றே இந்த நேரம்
எனக்குக் கிடைப்பினும் - நான்
நிகரில்லாத மகிழ்ச்சி யோடு
கொத்தித் தின்னுவேன்.
பாரில் உள்ள வைரம் யாவும்
ஒன்று சேரினும் - என்
பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி
இல்லை, இல்லையே!'
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
9 mins ago
வாழ்வியல்
33 mins ago
தமிழகம்
49 mins ago
ஆன்மிகம்
7 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago