தற்கால அரசியலில் பிரபலமானவர்களையும் சம்பவங்களையும் நினைவூட்டும் அரசியல் கதைகளில் மாஸ் கதாநாயகர்கள் துணிந்து நடிக்கும் சீசன் இது. ‘நோட்டா’ படத்தின் மூலம் இதைத் தொடங்கி வைத்தவர் விஜய் தேவரகொண்டா. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி மரணங்கள் வந்துசென்றன. தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சர்கார்’ படத்தில் சற்று தூக்கலாகவே தற்கால ஊழல் அரசியல் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படப் பட்டியலில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘என்.ஜி.கே’ என்ற படமும் இடம்பிடிக்கும் என்கிறது இயக்குநர் வட்டாரம். அதில் நந்த கோபாலன் குமரன் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துவருகிறார் சூர்யா. தீபாவளியை முன்னிட்டு, சூர்யாவின் குளோஸ் அப் முகத்துடன் கூடிய அந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.
அதை பாராட்டும் விதமாக ‘வாயில சிகரெட் இல்ல, கண்ணுல கூலிங் கிளாஸ் இல்ல, ஒரே ஒரு பார்வை, உதட்டுல சிரிப்ப வச்சுகிட்டு கண்ணுல வெறிதனம் காட்றதெல்லாம் சூர்யாவால மட்டுமே முடியும்’ என்று ட்விட்டரில் அவரது ரசிகர்கள் ‘என்.ஜி.கே’ பட புதிய போஸ்டரை புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்/
பாலின சமத்துவ விருது!
சமீபத்தில் நடந்துமுடிந்த மும்பை திரைப்பட விழாவில் (MAMI) ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படம் திரையிடப்பட்டது. எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்துக்கான கதையை எழுதி இயக்கியிருந்தார் தற்போது இயக்குநர் வஸந்த் எஸ். சாய் என தனது பெயரை மாற்றம் செய்துகொண்டிருக்கும் இயக்குநர் வசந்த். ‘பூ’ பார்வதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம், பாலின சமத்துவ பிரிவில் (Gender Equality Award) நடுவர்கள் சிறப்பு விருதை வென்று திரும்பியிருக்கிறது.
விழாமல் ஓடு!
காமன்மேன் பட நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்துவரும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கிவரும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மஹிமா நடித்துவருகிறார். “எனது கதைத் தேர்வில் ‘ஐங்கரன்’ முற்றிலும் வேறோரு படமாக இருக்கும்” என ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கும் இந்தப் படத்தின் டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.
அதில் இடம் பெற்றுள்ள “ஓடாத விழுந்துடுவேன்னு சொல்லுறதுக்கு இங்க ஆயிரம் பேர் இருக்காங்க, ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்லுறதுக்கு யாருமே இல்ல” என ஜி.வி.பிரகாஷ் பேசும் வசனத்தையும் டீசரையும் நெட்டிசன்கள் பாராட்டிப் பகிர்ந்து வருகிறார்கள். வெளியான சில நாட்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது இந்த டீசர்.
சந்தானத்தின் நாயகி
சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். பெரிய கதாநாயர்களே மிரளும் அளவுக்கு அழகான கதாநாயகிகளை தனக்கு ஜோடியாக்கிக் கொள்வதில் திறமையானவர் என பெயரெடுத்திருக்கும் சந்தானம், இந்தப் படத்தில் தாரா அலிசா பெர்ரி என்ற வளர்ந்துவரும் பாலிவுட் கதாநாயகியை தனக்கு ஜோடியாக்கி இருக்கிறார். தாரா அலிசா, இந்தியில் வெளியான ‘மாஸ்ட்ரம்’ ‘த பர்ஃபெக்ட் கேர்ள்’ ‘லவ் கேம்ஸ்’ உட்பட அரை டஜன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
சினிமா
11 mins ago
இந்தியா
33 mins ago
சினிமா
43 mins ago
தமிழகம்
59 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago