‘எண்டிசை தேவரும் புகுதும் ராஜராஜபுரி’ என்றும், ‘செம்பொன் மாட நிரை ராஜராஜபுரி’ என்றும் ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப்பரணியில் சிறப்பித்துக் கூறியுள்ள ஊர் தாராசுரம். ‘ராஜகம்பீரன்’ என்கிற பெயர் பெற்ற இரண்டாம் ராஜராஜ சோழன் பொ.ஆ. (கி.பி.1146 - 1163 வரை) பதினேழு ஆண்டுகள் கட்டிய கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் தாராசுரம் ஆலயம் ஆகும்.
இத்தலத்தில் அழகிய மகா மண்டபத்தில்தான் இந்த மூன்று முகங்களை உடைய வித்தியாசமான மாதொருபாகன் எனும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் காணப்படுகிறது. மூன்று தலைகளிலும் கரண்ட ஜடா மகுடம் அணிசெய்கிறது. பொதுவாக அர்த்த நாரீஸ்வரர் உருவத்தில் வலப்பக்கத்தில் ஆண்மைக்கு உரிய ஜடாமுடியும், இடப்பக்கத்தில் பெண்மைக்குரிய மகுடமும் இருக்கும். ஆனால், இங்கு அந்த வித்தியாசம் இல்லாமல் மூன்று முகங்களிலும் ஒரே மாதிரியான அழகிய கரண்ட ஜடா மகுடம் அலங்கரிக்கிறது. தலையைச் சுற்றிலும் சூரிய மண்டல ஜோதி வடிவம் காணப்படுகிறது. காதுகளில் மகர குண்டலங்கள் அணி செய்கின்றன. எட்டுத் திருக்கரங்களைக் கொண்டுள்ளார். வலதுபுறக் கரங்களில் சூரியனுக்கும் திருமாலுக்கும் உரிய தாமரை மலரையும், மேல் கரத்தில் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் உரிய ருத்திராட்சை மாலையையும் கத்தியையும் அம்பாளுக்கே உடைய அங்குசத்தையும் வைத்திருக்கிறார். இடது புறக் கரங்களில் கபாலக் கிண்ணம் இருக்கிறது. மேல் கரத்திலிருப்பதை (சக்ராயுதம் என்று சொல்கிறார்கள்) நன்கு உற்று நோக்கும் போது அது முகம் பார்க்கும் கண்ணாடி போல் தெரிகிறது. ஏனெனில் பெண்கள் அடிக்கடி தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லவா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
45 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago