சீக்கியக் குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்தநாள் ஆண்டு இது. இவர் சீக்கியக் குருக்களில் ஒன்பதாம் குரு. குரு ஹரி ராயின் மறைவுக்குப் பிறகு அவரது மகனான குரு ஹரி கிருஷ்ணன் அடுத்த குருவானார். ஆனால், நோய் கண்டு சில ஆண்டுகளில் அவர் இறக்கவே, குரு தேஜ் பகதூர் அடுத்த குருவாக அறிவிக்கப்பட்டார். குரு தேஜ் பகதூர் சீக்கிய குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், தன் ஆன்மிகச் சேவைக்கான ஒரு வழியாகவே தேஜ் பகதூர் இந்த வாய்ப்பைக் கருதினார்.
அவர் குருவாகப் பதவியேற்ற பிறகு பல இடங்களுக்குப் பயணம் செய்து சீக்கிய மதத்தின் பெருமைகளைப் பரப்பினார். சீக்கியக் குருமார்களில் அதிக அளவில் பயணம் செய்தவர் இவர்தான். ஆக்ரா, அலகாபாத், காசி, பாட்னா, அசாம், இன்றைய வங்கதேசம் போன்ற பல இடங்களுக்குப் பயணித்து சீக்கிய தர்மத்தைப் போதித்தார். தன் போதனைகளைக் கவிதையாகவும் எழுதினார். இவர் பயணம் செய்த இடங்களில் பிரார்த்தனைக் கூடங்களை எழுப்பினார். அசாமில் ஒரு குருத்வாராவை அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
க்ரைம்
27 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago