அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 2,269 உதவியாளர், நேர்முக எழுத்தர் பணியிடங்களை நிரப்ப மே மாதம் 18-ம் தேதி குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
2,269 காலியிடங்கள்
நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இள
நிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் நேர்காணல் உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வும் நேர்காணல் இல்லாத பணியிடங்களை (உதவி யாளர்) நிரப்புவதற்கு குரூப்-2-ஏ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது. அந்த வகை யில், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் மற்றும் சிறைத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்பட பல்வேறு துறை களில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிகளில் 2,269 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வெழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5-ம் தேதி ஆகும். விண்ணப்பிக்கும்முறை, தேர்வுக்கட்டணம், பாடத் திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
விளையாட்டு
44 mins ago
க்ரைம்
48 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago