தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆட்டம் முடிய இருந்த கடைசி சில நிமிடங்களில் தோல்வியை தவிர்ப்பதற்கான அந்தவொரு கோலை பதிவு செய்தது ஜெர்மனி. அதற்கு முன்னர் வரை அந்த அணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ஸ்பெயின் அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை.
குரூப் ‘இ’ பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதற்கு முன்னர் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியும், ஜெர்மனி தோல்வியையும் தழுவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த போட்டியை போலவே ஸ்பெயின் அணி கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெர்மனி அதனை கட்டுப்படுத்தி இருந்தது. ஆனாலும் இந்த ஆட்டத்தில் சுமார் 65 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் ஸ்பெயின் வீரர்கள். அதன் மூலம் 637 பாஸ்களை அந்த அணி மேற்கொண்டது. முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது.
இரண்டாவது பாதியில் 62-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் ஸ்பெயின் வீரர் மொராட்டா. அதற்கு பதில் கோலை பதிவு செய்ய சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டது ஜெர்மனி. நிக்லஸ், 83-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து தோல்வியை தவிர்த்தார். இந்த பிரிவில் ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
தமிழகம்
3 hours ago