கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறினார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-13, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளையில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் 33-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஐரிஸ் வாங்கிடம் 11-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 39-ம் நிலை வீரரான இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் 21-12, 21-17 என்ற நேர் செட்டில் கொரியாவின் ஹீயோ வாங்கை தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago