அரை இறுதியில் பிரக்ஞானந்தா

By செய்திப்பிரிவு

சென்னை: செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அரை இறுதிக்கு முன்னேறினார்.

இணையம் வழியாக நடைபெற்று வரும் இந்தத் போட்டியில் பிரக்ஞானந்தா, கால் இறுதி சுற்றில் சீனாவின் வெய் யி-யை எதிர்த்து விளையாடினார். இதில் பிரக்ஞானந்தா 2.5-1.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அரை இறுதி சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார்.

அனிஷ் கிரி தனது கால் இறுதி சுற்றில் 2.5-0.5 என்ற கணக்கில் நார்வேயின் ஆர்யன் தோரியை வீழ்த்தியிருந்தார். மற்றொரு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன், சீனாவின் டிங் லிரேனை சந்திக்கிறார். மேக்னஸ் கார்ல்சன் கால் இறுதி சுற்றில் 2.5-0.5 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேவிட் அன்டன் குஜ்ஜாரோவை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

கருத்துப் பேழை

11 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

28 mins ago

உலகம்

39 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்