நாளை முதல் ஐபிஎல் பிளே- ஆஃப் சுற்று: குஜராத் அணியை சந்திக்கிறது ராஜஸ்தான்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

15-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே நகரில் நடைபெற்றன. மும்பையில் 3 மைதானங்களிலும், புனேவில் ஒரு மைதானத்திலும் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிவடைந்தன.

நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் டெல்லியை மும்பை வென்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெற்றது.

குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. மும்பை இந்தியன்ஸ், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில் நாளை முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.

மே 24-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு நேரடியாக முன்னேறும்.

25-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

27-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில், முதல் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இதில்வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

29-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

20 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

51 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்