இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. ஹர்மான்பிரித் கவுர் 36, ஸ்மிருதி மந்தனா 35, அனுஜா பாட்டில் 22 ரன்கள் சேர்த்தனர். இலங்கை தரப்பில் சுகந்திகா குமாரி 3 விக்கெட் கைப்பற்றினார்.
131 ரன்கள் இலக்குடன் விளையாடிய இலங்கை அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. திலானி மனோதரா 41 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் அனுஜா பாட்டில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
கருத்துப் பேழை
5 mins ago
தமிழகம்
41 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago