செய்தித்துளிகள்

By செய்திப்பிரிவு

விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி தொடர் டிசம்பர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வடக்கு மண்டல அணிக்கு கவுதம் காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவண், இஷாந்த் சர்மா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். பாக். தொடர் ரத்தானால் இவர்கள் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------

ராய்ப்பூரில் நடைபெற்று வரும் உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி கால் இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

------------------------------------------------

உலக பாட்மிண்டன் சங்கம் ஆண்டு தோறும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்பெயினின் கரோலினா மரின், சீன வீராங்கனைகள் யன் லீ, பாவோ யக்ஸின் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------

இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால், தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

------------------------------------------------

டெல்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று மதிய உணவு இடைவேளையின் போது 1983, 2011ம் ஆண்டு உலககோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் மற்றும் பிஷன்சிங் பேடி, மன்சூர் அலிகான் பட்டோடி மனைவி ஷர்மிளா தாகூர் ஆகியோரை கவுரவிக்க டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

க்ரைம்

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்